10TH- STD - இயல் - 5
1. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு' என்றவர் -மணவை முஸ்தபா
2. “உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்' என்றவர் - மு.கு.ஜகந்நாத ராஜா
3. மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர், தனது தொல்காப்பிய நூலின் எவ்வியலில் குறிப்பிட்டுள்ளார்- மரபியல்
4. "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" என்று கூறும் செப்பேடு - சின்னமனூர்
5. சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்தும் செப்பேடு - சின்னமனூர்
6. வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்ட நூல் – கம்பராமாயணம்,பெருங்கதை,வில்லிபாரதம்
7. வடமொழியில் வழங்கி வந்த இராமாயணம், மகாபாரதம் தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளது
8. தேசிய உணர்வு ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசு எதை ஒரு கருவியாகக் கொண்டது - மொழிபெயர்ப்பு
9. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகமான யார் அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார் - ஷேக்ஸ்பியர்
10. 18ம் நூற்றாண்டு வரை எந்த மொழி நூல்கள் பல தமிழில் ஆக்கப்பட்டன- வடமொழி
11. ஆங்கிலேயர் வருகைக்குப்பின் ஆங்கில நூல்களும் ஆங்கிலம் வழியாகப் பிற எந்த மொழி நூல்களும் அறிமுகமாயின- ஐரோப்பிய மொழி
12. இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பு - கீதாஞ்சலி
13. ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்த நாட்டின் எதனை மதிப்பிடுவார்கள்- பண்பாடு, அறிவு
14. எந்த நாட்டின் நூல்கள் நேரடி மொழிபெயர்ப்பாக கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன- பிரஞ்சு, ஜெர்மன்,ஆப்பிரிக்கா,இலத்தீன், அமெரிக்கா
15. 1942 ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை இந்தி மொழியில் எழுதியவர் - ராகுல் சாங்கிருத்யாயன்
16. 1949 ஆம் ஆண்டு 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் - கணமுத்தையா
17. 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை முத்து மீனாட்சி மொழி பெயர்த்த ஆண்டு- 2016
18. 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை யூமா வாசுகி மொழி பெயர்த்த ஆண்டு- 2018
19. 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை டாக்டர்.ஸ்ரீதர் மொழி பெயர்த்த ஆண்டு - 2016
20. தொடர்வண்டியின் போக்குவரத்துப் பாதையான தண்டவாளத்தின் உள்ள குறுக்குக் கட்டைகளைக் குறிக்கும் சொல் - Railsleeper
21. Camel என்பதற்கு பொருள் - ஒட்டகம், வடம்
22. Underground drainage என்பதற்கு எவ்வாறு மொழி பெயர்த்தனர்- புதைச்சாக்கடை
23. Tele என்பது எதனைக் குறிக்கிறது - தொலை
24. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து எத்தனை நூல்கள் வரை மொழிபெயர்க்கப்படுகிறது - 5000
25. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்பை - பயன்கலை என்று குறிப்பிடுவார்கள்?
26. "காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ்நிலை வேண்டும்" என்று கூறியவர் - குலோத்துங்கன்
27. "சென்றிடுவீர் எட்டுத்திற்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்று கூறியவர் - பாரதியார்
28. "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று கூறியவர் - பாரதியார்
29. பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன என்பதைக் கூறியவர் - தனிநாயக அடிகள்
30. எந்த தேசிய நூற்கூடத்தில் (Bibliotheque National) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும், கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன - பிரான்சு
31. இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளும் எந்த தேசிய நூற்கூடத்தில் உள்ளது - பிரான்சு
32. பண்டைக் காலத்தில் முதன்முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் எந்த நூற்கூடத்தில் இருக்கின்றனர் - பிரான்சு
33. பிரான்சு தேசிய நூற்கூடத்தில் உள்ள அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்புகள் -சரளிப்புத்தகம்,மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ்,புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ்
34. நீதிவெண்பா என்ற நூலின் ஆசிரியர் - கா.ப.செய்குதம்பிப்பாவலர்
35. தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறும் நூல் - திருக்குறள்
36. "அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை" என்ற பாடலின் ஆசிரியர் - கா.ப.செய்குதம்பிப் பாவலர்
37. உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது - கல்வி
38. சதம் என்பதன் பொருள் - நூறு
39. ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தல் - சதாவதானம்
40. 'சதாவதானம்' என்ற கலையில் சிறந்து விளங்கியவர் - செய்குதம்பிப்பாவலர்
41. செய்குதம்பிப்பாவலரின் காலம் - 1874 to 1950
42. செய்குதம்பிப்பாவலர் பிறந்த 'இடலாக்குடி' என்ற ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது- கன்னியாகுமரி
43. எத்தனை வயதில் செய்யுள் இயற்றும் திறன் பெற்றார் - 15
44. சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர் - செய்குதம்பிப்பாவலர்
45. செய்குதம்பிபாவலர் எந்த ஆண்டு சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்ற பாராட்டை பெற்றார்- மார்ச் 10, 1907
46. செய்குதம்பிப்பாவலர் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபமும் பள்ளியும் எங்கு அமைக்கப்பட்டுள்ளது - இடலாக்குடி
47. திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் - பரஞ்சோதி முனிவர்
48. பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த மன்னர் - குசேல பாண்டியன்
49. கபிலரின் நண்பர் - இடைக்காடனார்
50. குசேல பாண்டியன் எந்த புலவரை அவமதித்தான் - இடைக்காடனார்
51. மனம் வருந்திய இடைக்காடனார் யாரிடம் முறையிட்டார் - இறைவனிடம்
52. இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி எங்கு சென்று தங்கினார்- வடதிரு ஆலவாயில்
53. அழகிய வேப்பமலர் மாலையை அணியும் மன்னன் - பாண்டியன்
54. 'பாண்டியன் என்னை இகழவில்லை சொல்லின் வடிவாக உன் இடதுப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும், சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்' என்று சினத்துடன் கூறியவர்- இடைக்காடனார்
55. இறைவன் இடைக்காடனாருக்கும் அவர் நண்பராகிய யாருக்கும் மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார் - கபிலர்
56. இலக்கணக்குறிப்பு தருக "கேள்வியினான்'' - வினையாலணையும் பெயர்
57. இலக்கணக்குறிப்பு தருக "காடனுக்கும் கபிலனுக்கும்" - எண்ணும்மை
58. மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னன் - தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
59. "மாசற விசித்த வார்புறு வளர்பின்' என்ற புறநானூற்றுப் பாடலை பாடியவர் - மோசிசீரனார்
60. திருவிளையாடல் கதைகள் சிலப்பதிகாரம் நூலை முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணமே விரிவும் சிறப்பும் கொண்டதாகும்
61. திருவிளையாடற்புராணத்தின் காண்டங்கள் - மதுரைக்காண்டம்,கூடற்காண்டம்,திருவாலவாய்க் காண்டம்
62. திருவிளையாடற்புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளது - 64
63. பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார் - திருமறைக்காடு
64. பரஞ்சோதி முனிவர் எந்நூற்றாண்டைச் சேர்ந்தவர் - 17ஆம் நூற்றாண்டு
65. வேதாரண்ய புராணத்தை இயற்றியவர் - பரஞ்சோதி முனிவர்
66. திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பாவை இயற்றியவர் - பரஞ்சோதி முனிவர்
67. மதுரை பதிற்றுப்பத்தந்தாதியை இயற்றியவர் - பரஞ்சோதி முனிவர்
68. "நுண்ணிய கேள்வி யோறும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - திருவிளையாடற்புராணம்
69. புதிய நம்பிக்கை என்ற துணைப்பாடத்தின் ஆசிரியர் - கமலாலயன்
70. கமலாலயன் அவர்களின் இயற்பெயர் - வே. குணசேகரன்
71. வயதுவந்தோர் கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவர் – கமலாலயன்
72. "கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்- ஐங்குறுநூறு
73. கொற்கை எந்த மாவட்டத்தில் உள்ளது – தூத்துக்குடி
74. வினா எத்தனை வகைப்படும் - ஆறு
75. மாணவரிடம் இந்தக் கவிதையின் பொருள் யாது? என்று ஆசிரியர் கேட்டல் எவ்வகை வினா - அறிவினா
76. "ஆசிரியரிடம் இந்தக் கவிதையின் பொருள் யாது? என்று மாணவர் கேட்டல்" எவ்வகை வினா- அறியாவினா
77. இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா? என வினவுதல் எவ்வகை வினா- ஐயவினா
78. 'ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? என்று நூலகரிடம் வினவுதல் எவ்வகை வினா -கொளல்வினா
79. என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இருக்கிறதா? என்று கொடுப்பதற்காக வினவுதல் எவ்வகை வினா - கொடைவினா
80. "வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல் எவ்வகை வினா - ஏவல்வினா
81. "அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார்" என்று கூறும் நூல் - நன்னூல்
82. சுட்டு மறைநேர் ஏவல் வினாதல் உற்றது உரைத்தல் உறுவது கூறல்" என்று கூறும் நூல் - நன்னூல்
83. விடை எத்தனை வகைப்படும் - எட்டு
84. கடைத்தெரு எங்குள்ளது? என்ற வினாவிற்கு, 'வலப்பக்கத்தில் உள்ளது' எனக்கூறல் எவ்வகை விடை - சுட்டு விடை
85. 'கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் போகமாட்டேன் என மறுத்துக் கூறல் எவ்வகை விடை - மறை விடை
86. 'கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் 'போவேன்' என்று உடன்பட்டுக் கூறல் எவ்வகை விடை- நேர் விடை
87. இது செய்வாயா? என்று வினவியபோது 'நீயே செய்' என்று ஏவிக்கூறுவது எவ்வகை விடை - ஏவல் விடை
88. 'என்னுடன் ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு 'வராமல் இருப்பேனா' என்று கூறுவது - வினா எதிர்வினாதல் விடை
89. 'நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்கு 'கால் வலிக்கிறது' என்று உற்றதை உரைப்பது எவ்வகை விடை - உற்றது உரைத்தல் விடை
90. 'நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்குக் 'கால் வலிக்கும்' என்று உறுவதை உரைப்பது எவ்வகை விடை - உறுவது கூறல் விடை
91. 'உனக்குக் கதை எழுதத் தெரியுமா? என்ற வினாவிற்குக் 'கட்டுரை எழுதத் தெரியும்' என்று கூறுவது எவ்வகை விடை - இனமொழி விடை
92. வெளிப்படை விடைகள் - சுட்டு விடை,மறை விடை,நேர் விடை
93. குறிப்பு விடைகள் - ஏவல் விடை, வினா எதிர்வினாதல் விடை, உற்றது உரைத்தல், விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை
94. செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் – பொருள்கோள் என்று பெயர்
95. பொருள்கோள் எத்தனை வகைப்படும் - 8
96. 'சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - சீவகசிந்தாமணி
97. பாடலின் தொடக்கம் முதல் முடிவுரை ஆற்றுநீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது - ஆற்றுநீர் பொருள்கோள்
·
ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரிசையாக) அமைந்து வருவது - நிரல்நிரை பொருள்கோள்
98. நிரல்நிரைப் பொருள்கோள் எத்தனை வகைப்படும் - 2
99. செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச் சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப் படியே நிறுத்திப்பொருள் கொள்ளுதல்- முறைநிரல்நிறைப் பொருள்கோள்
100. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது - என்ற குறளில் பயின்று வரும் பொருள்கோள் - முறை நிரல்நிறைப் பொருள்கோள்
101. செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர்எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் - எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
102. 'விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்' என்ற குறளில் பயின்று வரும் பொருள்கோ- எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
103. ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்கொள்வது - கொண்டு கூட்டுப் பொருள்கோள்
104. "ஆலத்துமேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு" (கொண்டு கூட்டுப் பொருள்கோள்) என்ற பாடல் வரி யாருடைய உரையில் காணப்படுகிறது - மயிலைநாதர் உரை
105. யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - நன்னூல்
106. 'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி- சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
107. அருந்துணை என்பதைப் பிரித்து எழுதுக - அருமை + துணை
108. 'இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்டது - அறியாவினா வினா,'அதோ அங்கே நிற்கும்' என்று மற்றொருவர் கூறுவது சுட்டு விடை
109. 'அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை' என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது - கல்வி
110. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் - மன்னன்
111. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் - இறைவன்
112. ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது - Inter preting
113. 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு அள்ளும் சிலப்பதிகார மென்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு' என்று பாடியவர் - பாரதியார்
114. ''அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிபார்த்தேன், பேத்தி, நெட்டுரப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே" என்ற கவிதை யாருடையது - பாரதிதாசன்
115. Lute music என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - யாழிசை
116. தமிழில்,"சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று" என்ற நூலை எழுதியவர் - வல்லிக்கண்ணன்
117. தமிழில், "குட்டி இளவரசன்" என்ற நூலை எழுதியவர் - வெ.ஸ்ரீராம்
118. தமிழில், "ஆசிரியரின் டைரி" என்ற நூலை எழுதியவர் - எம்.பி.அகிலா
119. "சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்" என்ற பாடலில் பயின்று வரும் பொருள்கோள் - ஆற்றுநீர்ப் பொருள்கோள்
120. பொருத்துக.
1. கேள்வியினான் - நூல் வல்லான்
2. கேண்மையினான் - நட்பினன்
3. தார் - மாலை
4. முடி - தலை
121. பொருத்துக.
1. முனிவு - சினம்
2. அகத்து உவகை - மனமகிழ்ச்சி
3. தமர் - உறவினர்
4. நீபவனம் - கடம்பவனம்
122. பொருத்துக.
1. மீனவன் - பாண்டிய மன்னன்
2. நுவன்ற - சொல்லிய
3. என்னா - அசைச்சொல்
4. கவரி - சாமரை
123. பொருத்துக. (பாரதியின் மொழிபெயர்ப்பு)
1. காட்சி, பொருட்காட்சி - Exhibition
2. இருப்புப் பாதை - East Indian Railway
3. புரட்சி - Revolution
4. வேலை நிறுத்தம் - Strike
124. பொருத்துக
1. Emblem - சின்னம்
2. Thesis - ஆய்வேடு
3. Intellectual - அறிவாளர்
4. Symbolism - குறியீட்டியல்
125. பொருத்துக
1. Transcribe - படியெடுத்தல்
2. Transfer - மாறுதல்
3. Transform - உருமாற்றுதல்
4. Transact - செயல்படுத்துதல்
126. தமிழ்நூல்கள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்படுவதை கொண்டு பொருத்துக
1. ஆங்கிலம் - முதல்
2. மலையாளம் - இரண்டு
3. தெலுங்கு - மூன்று
4. இந்தி - நான்கு
5. கன்னடம் - ஐந்து
6. வடமொழி - ஆறாம்
7. ரஷ்யமொழி - ஏழாம்
8. வங்கமொழி - எட்டாம்
9. மராத்தி - ஒன்பது
0 Comments
THANK FOR VISIT