11TH - STD - டெல்லி சுல்தான் -

1.    டெல்லி சுல்தான் :

          1.    அடிமை வம்சம் ஆட்சி காலம் - 1206   - 1290.

          2.    கில்ஜி வம்சம் ஆட்சி காலம்    - 1290   - 1320.

          3.    துக்ளக் வம்சம் ஆட்சி காலம்   -  1320  - 1414.

          4.    சையது வம்சம் ஆட்சி காலம்  -  1414  - 1451.

          5.    லோடி வம்சம் ஆட்சி காலம்    - 1451  - 1526.

2.    அடிமை வம்சத்தின் மூன்று முக்கிய ஆட்சியாளர்கள்:

          1.    குத்புதீன் ஐபக் ஆட்சி காலம்       - 1206 - 1210.

          2.    இல்டுமிஷ் ஆட்சி காலம்             - 1210 - 1236.

          3.    பால்பன் ஆட்சி காலம்           - 1266 - 1287.

3.    அடிமை வம்சம்- மம்லுக் வம்சம் .

4.    மம்லுக் என்பதற்கு உடைமை என்று பொருள் இது "ஓர் அடிமை "என்பதற்கான அரபு தகுதி பெயர்.

5.    சுல்தான் முகமது கோரி என்பவருக்கு ஓர் அடிமையாக விற்கப்பட்டார் - குத்புதீன் ஐபக்.

6.    குத்புதீன் ஐபக் பிகாரையும் வங்கத்தையும் கைப்பற்றுவதற்கு உதவிய ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த  துருக்கிய தளபதி - முகமது - பின் - பக்தியார் கில்ஜி.

7.    1210 குத்புதீன் ஐபக் லாகூரில் எந்த விளையாட்டின் போது நிகழ்ந்த ஒரு விபத்தில் இறந்தார் -சௌளகான் / குதிரை போலோ.

8.    குத்புதீன் ஐபக்கின் அடிமை - சம்சுதீன் இல்துமிஷ்.

9.    குத்புதீன் ஐபக்கின் மாமனார் - இல்திஸ்.

10.   குத்புதீன் ஐபக்கின் மகன் - ஆரம் ஷா.

11.   பண்டகன் என்பதன் பொருள் - படை அடிமை .

12.   வட இந்தியாவில் மொய்சுதீன் கோரியின் அடிமை - குரித் பண்டகன்,

13.   சுல்தான் சம்சுதீன் இல்துமிஷின் அடிமை - ஷம்ஸி பண்டங்கன் .

14.   ஆரம் ஷா ஆட்சிக்கு வருவதை தடுத்து தில்லியின் ஆட்சி கட்டிலில் அமர்ந்தவர் - சம்சுதீன் இல்துமிஷ்.

15.   லாகூரிலும் முல்தானிலும் நசுருதீன் குபாச்சாவின் படையை ஏதிர்த்து வெற்றி பெற்றவர் - சம்சுதீன் இல்துமிஷ்.

16.   வங்காள ஆளுநர் அலிவர்தனின் சதியையும் முறியடித்தவர் - சம்சுதீன் இல்துமிஷ்.

17.   இல்துமிஷிடம் ஆதரவு கேட்டவர்  - கவாரிஸ்மி ஷா ஜலாலுதீன்.

18.   இல்துமிஷின் மகள் - சுல்தானா இரஸியா.

19.   இல்துமிஷின் கடைசி மகன் - சுல்தான் இரண்டாம் நசீர் அல்லுதீன் முகமது.

20.   243 அடி குதுப்மினாரை கட்ட தொடங்கியவர் - குத்புதீன் ஐபக்.

21.   குதுப்மினாரை கட்டி முடித்தவர் - இல்துமிஷ்.

22.   ஷிவாலிக் ஆட்சிப் பகுதி தளபதியாக இருந்த உலுக் கான், தில்லியைக் கைப்பற்றிய ஆண்டு - 1254 .

23.   நயிப் - - முல்க் என்ற பட்டத்தை சூட்டி கொண்டவர் - உலுக் கான்.

24.   மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பயணி - இபின் பதாதா.

25.   குதிரைகள் மீது ஆண்கள் சவாரி செய்வதை போல், கையில் வில் அம்புடன் , அரச பரிவாரங்கள் சூழ இரஸியாவும் சவாரி செய்தார் ன்று கூறியவர்-இபன் பதூதா.

26.   இல்துமிஷின் மகள் -  சுல்தானா இரஸியா.

27.   சுல்தானா இரஸியா அரியணை ஏறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் - துருக்கி பிரபுக்கள்.

28.   குதிரை இலாயப் பணித் துறை தலைவராக சுல்தானா இரஸியா அமர்த்திய அடிமை- ஜலாலுதீன் யாகுத் .

29.   டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளிலும் ,தோவாபிலும் நிகழ்ந்த பால்பனின் தாக்குதல்களை குறிப்பிடுபவர் - பரணி.

30.   மேவாரைச் சுற்றிய காட்டுப் பகுதியில் வாழ்ந்த மியோ சமூகம் கொலையிலும் கொள்ளையிலும் ஈடுபட்டிருந்தது. இவர்களை முற்றிலும் அழித்தவர் - பால்பன்.

31.   பால்பன் யாரை வங்காள ஆளுநராக நியமித்தார் - துக்ரில் கான்.

32.   துக்ரில் கான் வெளிப்படையாகவே கலகம் செய்தார். அவரை ஒடுக்குவதற்கு பால்பன் யாரை அனுப்பி வைத்தார் - அமின் கான்.

33.   பால்பன் மகன் - புக்ரா கான் , முகமது கான். கைகுபாத்.

34.   பால்பன் யாரை மீண்டும் வங்காள ஆளுநராக நியமித்தார் - புக்ரா கான்.

35.   12- ம் நூற்றாண்டை சேர்ந்த மாபெரும் மங்கோலிய அரசர் - செங்கிஸ்கான்.

36.   செங்கிஸ்கான் பேரன் - ஹுலுக் கான்.

37.   உலுக்கானுடன் நல்லுறவைப் பேணுவதற்கு முயற்சி செய்தவர்- பால்பன்.

38.   சட்லெஜுக்கு அப்பால் முன்னேறி வர மாட்டோம் என்ற வாக்குறுதியை மங்கோலியர்களிடமிருந்து பெற்றவர் - பால்பன்.

39.   மஃப்ருஸி -  குத்தகையில்லா நிலங்கள்.

40.   மங்கோல் - என்ற பெயர், மங்கோலிய மொழி பேசக்கூடிய மத்திய ஆசிய நாடோடிக் குழுக்கள்.

41.   மங்கோலியர்களின் ஆட்சிப்பகுதி - நவீன ரஷ்யாவின் பெரும்பகுதி , சீனா, கொரியா , தென் கிழக்கு ஆசியா, பாரசீகம், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஐரோப்பா.

42.   1259  டெல்லிக்கு ஒரு நல்லெண்ண குழுவை அனுப்பி வைத்தவர்- ஹுலுக் கான்.

43.   மங்கோலிய தாக்குதல்களிலிருந்து எல்லைப் பகுதியை காப்பதற்காக முல்தானின் ஆளுநர் பொறுப்பு அளித்திருந்த பால்பன் மகன்- முகமது கான்,

44.   மங்கோலியரோடு ஏற்பட்ட  மோதலில் கொல்லப்பட்டவர் - முகமது கான் . பால்பன் 1286 ல் இறந்தார்.

45.   கில்ஜி வம்சம்: 1290-1320.

          1.    ஜலாலுதீன் கில்ஜி   - 1290 - 1296.

          2.    அலாவுதீன் கில்ஜி   - 1296 - 1316.

          3.    முபாரக் ஷா கில்ஜி  - 1316 - 1320.

46.   பால்பனின் மகன் கைகுபாத் அரசாராகும் தகுதி அற்றவராக இருந்தார். இதனால் அவரது 3 - வயது மகன் கைமார்ஸ் அரச கட்டிலில்  அரசாரானார்.

47.   கைக்குபாத்தின் பெயரில் அரசாட்சி செய்த யார் அவரைக் கொல்வதற்கு ஒரு அதிகாரியை அனுப்பினார்- ஜலாலுதீன் கில்ஜி. ஜலாலுதீன் ஓர் - ஆப்கானியர்.

48.   ஜலாலுதீன் கில்ஜி மருமகன்- அலாவுதீன் கில்ஜி.

49.   ஜலாலுதீன் கில்ஜியை கொன்று அரியணை ஏறியவர் - அலாவுதீன் கில்ஜி

50.   அலாவுதீன் கில்ஜி படை தளபதி - மாலிக் காஃபூர்.

51.   அலாவுதீன் கில்ஜி நடத்திய தாக்குதல்கள்:

          1.    தேவகிரி -1296 , 1307, 1314.

          2.    குஜராத் -1299 - 1300.

          3.    ரான்தம்பூர் -1301.

          4.    சித்தூர் -1303.

          5.    மால்வா -1305.

52.   அலாவுதீன் கில்ஜியின் முதல் இலக்கு மேற்குத் தக்காணத்தில் இருந்ததேவகிரி.

53.   1307 - தேவகிரி கோட்டையை கைப்பற்றுவதற்காக யாருடைய தலைமையில் ஒரு பெரும் படையை அலாவுதீன் கில்ஜி அனுப்பினார் - மாலிக் காஃபூர்.

54.   வாரங்கல்லின் காகக்தீய அரசர்பிரதாபருத்ரதேவா.

55.   பிரதாபருத்ரதேவா தேரற்கடிக்கப்பட்டார் ஆண்டு - 1309.

56.   ஹொய்சாள அரசர் - மூன்றாம் வீரவல்லாளன்.

57.   சிதம்பரம் ,திருவரங்கம் ஆகிய கோயில் நகரங்களையும் மதுரையையும் சூறையாடியவர்- மாலிக் காஃபூர்.

58.   1311-ல் ஏராளமான செல்வக் குவியலுடன் டெல்லி திரும்பியவர் - மாலிக் காஃபூர்.

59.   பேரரசின் அனைத்து பகுதிகளுடன் தொடர்பில் இருப்பதற்காக அஞ்சல் துறையை ஏற்படுத்தியவர்  - அலாவுதீன் கில்ஜி.

60.   படைவீரர்களுக்கு கொள்ளையில் பங்கு தராமல் பணமாக ஊதியம் வழங்கிய முதல் சுல்தான்- அலாவுதீன் கில்ஜி.

61.   கள்ளச்சந்தை , பதுக்கல் குறித்த விவரங்களை சேகரிப்பதற்கு விரிவான ஒற்றாடல் வலைப்பின்னலை ஏற்படுத்தியவர் - அலாவுதீன் கில்ஜி.

62.   யாருடைய ஆட்சி காலத்தில் விலை ஒழுங்குமுறை விதிகளை மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்- அலாவுதீன் கில்ஜி.

63.   ஏதேனும் எடைக்குறைவு கண்டுபிடிக்கப்பட்டால் விற்பவரின் உடலிலிருந்து அதற்கு சமமான எடையுள்ள - சதையை வெட்டி அவரது கண்முன்னேயே வீசப்பட்டது.

64.   அலாவுதீன் கில்ஜி தனது மூத்த மகன்  - கிசிர் கான் வாரிசாக நியமித்தார்.

65.   மாலிக்காபூர் -ஆட்சிக்கு வந்த எத்தனை  நாட்களில் பிரபுகளால் கொல்லப்பட்டார்- 35.

66.   1320 ல் கியாசுதீன் துக்ளக் ஆக ஆட்சியில் அமர்ந்தவர்- காஸி மாலிக்.

67.   நாற்பதின்மர் சகல்கானி  குழுவை அமைத்தவர்- இல்துமிஷ்.

68.   நாற்பதின்மர் சகல்கானி குழுவை ஒழித்தவர் - பால்பன்.

69.   அபிசீனிய அடிமை யாகுத் தலைமையில் துருக்கியர் அல்லாத பிரபுக்களையும் இந்து-முஸ்லிம் பிரபுக்களையும் கொண்ட ஒரு குழுவை அமைத்தவர் - சுல்தானா இரஸியா.

70.   துக்ளக் வம்சம்: 1320-1414

          1.    கியாசுதீன் துக்ளக் ஆட்சி காலம் -1320 - 1324.

          2.    முகமது பின் துக்ளக் ஆட்சி காலம் -1324 - 1351.

          3.    ஃபெரோஸ் துக்ளக் ஆட்சி காலம் -1351 - 1388.

71.   பிரபுக்கள் வகுப்பினருடன் சமரச கொள்கையை பின்பற்றியவர்- கியாசுதீன் துக்ளக்.

72.   கியாசுதீன் துக்ளக் மகன் - ஜானாகான்.

73.   முகமது பின் துக்ளக் இயற்பெயர்- ஜானாகான்.

74.   ஜானாகான் ஆட்சி கட்டிலில் ஏறியபோது சூட்டிக்கொண்ட பட்டம்- முகமது பின் துக்ளக்.

75.   டெல்லியிலிருந்து தலைநகரை தேவகிரிக்கு மாற்றும் முயற்சியை மேற்கொண்டவர் - முகமது பின் துக்ளக். மீண்டும் தலைநகரை டெல்லிக்கு மாற்ற உத்தரவிட்டார்.

76.   தேவகிரிக்கு தெளலதாபாத் என்று மறுபெயர் சூட்டியவர் - முகமது பின் துக்ளக்.

77.   அடையாள நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் -முகமது பின் துக்ளக்.

78.   வேளாண்மையை கவனித்துக்கொள்ள திவான் - - கோஹி என்ற துறையை ஏற்படுத்தியவர் - முகமது பின் துக்ளக்.

79.   கியாசுதீன் துக்ளக்கின் தம்பி - ரஜப்.

80.   ஃபெரோஸ் ஷா துக்ளகின் தந்தை -ரஜப்.

81.   ஃபெரோஸ் ஷா வை ,12,000 குதிரை வீரர்களை கொண்ட சிறப்பு படைக்கு தளபதியாக்கியவர் -  கியாசுதீன் துக்ளக்.

82.   ஃபெரோஸ் துக்ளக்கிடம் ஒரு உயர் அதிகாரியாக இருந்த புகழ்பெற்ற கான் - - ஜஹான், இஸ்லாமுக்கு மாறிய ஒரு பிராமணர்.

83.   கான் - - ஜஹான் ஆதியில், கண்ணு என்று அறியப்பட்ட அவர். வாரங்கல்லில் நிகழ்ந்த சுல்தானிய படையெடுப்பின்போது சிறைபிடிக்கப்பட்டவர்.

84.   அலுவலர்களை பரம்பரையாக பணியமர்த்துகிற முறையை மீண்டும் அறிமுகப்படுத்தியவர் - ஃபெரோஸ் துக்ளக்.

85.   அடிமைகளின் நலன்களை கவனிப்பதற்காக தனியே ஓர் அரசு துறையை ஏற்படுத்தியவர் - ஃபெரோஸ் துக்ளக்.

86.   அடிமைகள் நலத்துறையில் மொத்தம் இருந்த அடிமைகள் - 1,80,000 அடிமைகள்.

87.   ஃபெரோஸ் துக்ளக் காலத்தில் ராணுவ படையெடுப்பு சிந்துவின் மீது தொடுக்கப்பட்ட ஆண்டு -1362.

88.   தமது அரசை இஸ்லாமிய அரசாக அறிவித்தவர்- ஃபெரோஸ் துக்ளக்.

89.   இஸ்லாமியர் அல்லாதவருக்கு ஜிஸியா எனும் வரியை விதித்தவர்- ஃபெரோஸ் துக்ளக்.

90.   சட்லெஜ் நதியில் இருந்து ஹன்ஸிக்கு வெட்டிய கால்வாயும் யமுனையில் வெட்டிய மற்றொரு கால்வாயும் யாருடைய பொதுபணி வளர்ச்சிக் கொள்கை  - ஃபெரோஸ் துக்ளக்.

91.   இந்தியாவில் முதன்முறையாக இஸ்லாமியர் அல்லாத குடிமக்களின் மீது ஜிஸியா எனும் வரியை விதித்தவர்-குத்புதீன் ஐபக்.

92.   16 -ம் நூற்றாண்டில் ஜிஸியா வரியை ஒழித்த முகலாய அரசர் - அக்பர்.

93.   17-ம் நூற்றாண்டில் ஜிஸியா வரியை மீண்டும் அறிமுகப்படுத்திய முகலாய அரசர்-ஒளரங்கசீப்.

94.   ஃபெரோஸ் துக்ளக்  மகன் - பதே கான்.

95.   ஃபெரோஸ் துக்ளக்  பேரன்  - கியாசுதீன்.

96.   ஃபெரோஸ் துக்ளக் இறந்த ஆண்டு -1388.

97.   துக்ளக் வம்சத்தின் கடைசி அரசர் -நசுருதீன் முகமது ஷா.

98.   யாருடைய ஆட்சியின் போது தைமூரின் படையெடுப்பு நிகழ்ந்தது -நசுருதீன் முகமது ஷா.

99.   தைமூர் வந்து சேர்ந்த  செய்தியை அறிந்து தில்லயை விட்டுத் தப்பி ஓடியவர் - சுல்தான் நசுருதின்.

100. கொல்லர் ,கல்தச்சர்  ,தச்சர் போன்ற இந்திய கைவினைஞர்களைச் சிறைபிடித்துச் சென்று , தனது தலைநகர் சாமர்கண்டில் கட்டடங்களை  கட்ட ஈடுபடுத்தியவர்- தைமுர்.

101. யரை தனது துணை நிலை ஆளுநராக  தைமூர் நியமித்தார் - கிசர் கான் .

102. சையது வம்சத்தை நிறுவியவர் - கிசர் கான்.

103. முற்பட்ட சையது சுல்தான்கள், தைமூரின் மகனுக்கு திறை செலுத்தி ஆட்சிபுரிந்தனர். அவர்களின் ஆட்சியை யாஹியா - பின் - அஹ்மத் சிரிந்தி இயற்றிய எந்த நூல் குறிப்பிடுகிறது  - தாரிக் - - முபாரக் - சாஹி

104. டெல்லி சுல்தானிய ஆட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றில் ஆட்சி உரிமையை தாமாகவே துறந்து, 30 ஆண்டுகள் மனநிறைவோடும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரே சுல்தான்-ஆலம் ஷா.

105. லோடி வம்சத்தை நிறுவியவர் - பஹ்லுல் லோடி.

106. பஹ்லுல் லோடி மகன் - சிக்கந்தர் லோடி .

107. சிக்கந்தர் லோடி 1504 ல் தலைநகரை டெல்லியிலிருந்து  எங்கு மாற்றினார் - ஆக்ரா.

108. முதலாம் பானிபட் நடந்த ஆண்டு - 1526. போரில் பாபரிடம் தோற்றவர்-இப்ராஹீம் லோடி.

109. பூமியில் கடவுளின் பிரதிநிதியாக தான் ஆட்சி செய்வதாக கூறியவர் - பால்பன்.

110. மதத்தின் பரிந்துரைகள் குறித்து தாம் கவலைப்படவில்லை என்று கூறிக்கொண்டு- யார் முழு அதிகாரத்தை கோரினார் - அலாவுதீன் கில்ஜி.

111. தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமி உருவத்தை பொறித்தவர் - முகமது கோரி.

112. 1325 -ல் யார் சமணத் துறவிகளுக்கும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஒரு ஆணை வெளியிட்டார் - முகமது பின் துக்ளக்.

113. இஸ்லாமியர்களுக்கு நிகராக ராய், ராணா, தாசூர், ஷாமஹ்தா, பண்டிட் போன்ற அரசு பட்டங்கள் இந்துக்களுக்கும் வழங்கப்பட்டன என்றும் யார் எழுதுகிறார் - பரணி.

114. 13-ம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் லிங்காயத் பிரிவை  நிறுவியவர் - பசவண்ணர்.

115. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த யார் உருவ வழிபாட்டையும் சாதிப் பாகுபாடுகளையும் எதிர்த்தார் - நாமதேவர்.

116. தரை வழியிலும் கடல் வழியிலும் நிகழ்ந்த இந்தியாவின் அயல் வணிகம், 13 ம் நூற்றாண்டில் கணிசமாக வளர்ச்சி பெற்றது என்கிறார் - இர்ஃபான் ஹபீப்.

117. சீனர் கண்டுபிடித்து அரபியர் கற்றுக்கொண்ட காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் யாருடைய காலத்தில் இந்தியாவில் அறிமுகமானது - தில்லி சுல்தானியர்.

118. சீனர்.கண்டுபிடித்த நூற்புச் சக்கரம், 14 ஆம் நூற்றாண்டில் ஈரான் வழியே இந்தியாவுக்கு வந்தது.

119. வங்கத்தில் பட்டுப்புழு வளர்ப்பு மையங்கள் நிறுவப்பட்ட ஆண்டு -  15 ம் நூற்றாண்டு.

120. தில்லியில் ஒரு பெரிய மதரஸாவைக் கட்டியவர்- ஃபெரோஸ் துக்ளக்.

121. அரபியரின் சிந்து படையெடுப்பு குறித்து எழுதப்பட்ட நூல் - சச்நாமா.

122. 1260 - ல் மின்ஹஜ் சிராஜ் ஆல் எழுதப்பட்ட நூல் - தபகத் -- நசிரி.

123. எந்த ஆண்டு பாக்தாத் நகரை மங்கோலியர் கைப்பற்றும் வரை கலீபா அந்நகரை ஆட்சி செய்தார் -1258.

124. எகிப்தில் 1516 - 17 ஆம் ஆண்டுகளில் ஆட்டோமானியர் வெற்றி பெறும் வரை -கலீபா ஆட்சி செய்தனர்.

125. யாருடைய தலைமையில் துருக்கி குடியரசு உருவானபோது கலீபா பதவி ஒழிக்கப்பட்டது- முஸ்தபா கமால் அத்தாதுர்.

126. சுல்தான் ஃபொரோஸ் துக்ளக் , 1,80,000 அடிமைகள் வைத்திருந்ததற்காக புகழ் பெற்றவர். இதில் 12,000 பேர் கைவினைஞர்களாகப் பணிபுரிந்தனர்.

127. யாருடைய முதன்மை அமைச்சர் கான் ஜஹன் மக்பூல் 2000 த்துக்கும் அதிகமான பெண் அடிமைகளை வைத்திருந்தார்- ஃபொரோஸ் துக்ளக்.

128. குவ்வாத் உல் இஸ்லாம் மசூதியை டெல்லியில் கட்டியவர் - குத்புதீன் ஐபக்.

129. தில்லி சுல்தான் காலத்தில் சமண மடாலயத்தின் மீது கட்டப்பட்ட மசூதிகள்:

          1.    குவ்வாத் உல் இஸ்லாம் மசூதி - தில்லி.

          2.    அத்ஹை - தின் - - ஜோப்ரா - அஜ்மீர்.

130. அலாய் தர்வாஸாவை கட்டியவர் - அலாவுதீன் கில்ஜி.

131. இந்திய இசை, உலகில் உள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என்று வெளிப்படையாக அறிவித்தவர் - அமீர் குஸ்ரு.

132. ராக் தர்பன் என்ற இந்திய சம்ஸ்கிருத இசை நூலை எழுதியவர் -ஃபெரோஸ் துக்ளக்.

133. ஒன்பது வானங்கள் நூலில் தம்மை ஒரு இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் யார் பெருமிதம் கொள்கிறார் - அமீர் குஸ்ரு.

134. சூஃபி துறவி நிசாமுதீன் அவுலியாவின் உரையாடல்களை கொண்ட ஃபவாய் துல் ஃபவாத் என்ற நூலைத் தொகுத்தவர் - அமிர் ஹாஸ்ஸன்.

135. பாரசீக உரைநடையில் ஆசானாக தோன்றியவர் - ஜியாவுத்தீன் பரனி.

136. ஃபக்ருத்தின் கவ்வாஸ் இயற்றிய நூல் - ஃபரங் - - கவாஸ்.

137. அமீர் குஸ்ரு இயற்றிய நூல் - ஒன்பது வானங்கள் .

138. ஜியா நக்ஷபி இயற்றிய நூல் - துதிநமஹ - கிளி நூல்

139. பால பவோலி, சுல்தான் பால்பன் நல்லாட்சியின் விளைவாக விஷ்ணுபகவான், எந்தக் கவலையும் இன்றி பாற்கடலில் துயில்கிறார் என்கிற கல்வெட்டு -1276 -ம் ஆண்டுக்குரிய செவ்வியல் சமஸ்கிருத கல்வெட்டு -

140. காஷ்மீர் அரசர்களின் வரலாறான ஜைனவிலாஸ் நூலை இயற்றுவதற்கு பட்டவதார என்பவர் -ஷா நாமா எனும் ஃபிர்தெசியின் நூலை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுள்ளார் .

141. உலகப் புகழ்பெற்ற கஜுராஹோ கோயிலை கட்டியவர்கள் - சந்தேலர்கள்.

142. இபன் பதூதா ஒரு எந்த நாட்டுப் பயணி - மொராக்கோ.

143. அரசபதவியை விடுத்து, டெல்லியில் இருந்து விலகி 30 ஆண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் -ஆலம் ஷா.