19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

1.    1828 - பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்- ராஜா ராம்மோகன் ராய் -(1772-1833)

2.    ராஜாராம் மோகன்ராய் புலமை பெற்றிருந்த மொழிகள்- வங்காளம் (தாய்மொழி),சமஸ்கிருதம்,அரபி,பாரசீகம்,ஆங்கிலம்.

3.    ராஜா ராம்மோகன் ராய் கல்கத்தாவில் கோவிலை நிறுவிய ஆண்டு -1828 ஆகஸ்டு 20 . திருவுருவச் சிலைகள் வைக்கப்படவில்லை.

4.    1829-இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் சதி  எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்துகட்ட இயற்றிய சட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் - ராஜாராம் மோகன்ராய்.

5.    இந்துக்களின் மறை நூல்கள் அனைத்தும் ஒரே கடவுள் கோட்பாட்டை அல்லது ஒரே கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாக கூறியவர் - ராஜாராம் மோகன்ராய்.

6.    ராஜாராம் மோகன்ராய் மறைவுக்குப் பின்னர் அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்தவர்-  மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்.

7.    ரவீந்திரநாத் தாகூரின் தந்தை - மகரிஷி தேவேந்திரநாத் தாகூர். 1817 - 1905.

8.    மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் நம்பிக்கை பற்றிய எத்தனை கொள்கைகளை முன்வைத்தார் - 4.

9.    கேசவ் சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் இனைந்த ஆண்டு-1857.

10.   பிரம்ம சமாஜம் உறுப்பினர்கள் இடையே பிளவு ஏற்பட்ட ஆண்டு -1886.

11.   ஆதிபிரம்ம சமாஜம் - தேவேந்திரநாத் தாகூர்.

12.   இந்திய பிரம்ம சமாஜ் - கேசவ் சந்திர சென்.

13.   குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர் இந்தியாவின் பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி நிறுவிய அமைப்பு - சாதாரண சமாஜ்.

14.   நவீன வங்காள உரைநடையின் முன்னோடி - ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (1820-1891).

15.   1856 - இல் யாருடைய முயற்சியால்  விதவை மறுமண சட்டம் இயற்றப்பட்டது - ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்.

16.   1860 - இயற்றப்பட்ட திருமண வயதுச்சட்டம்  - திருமண வயது -10.

17.   1891 - இயற்றப்பட்ட திருமண வயதுச்சட்டம்  - திருமண வயது -12.

18.   1925 - இயற்றப்பட்ட திருமண வயதுச்சட்டம்  - திருமண வயது -13.

19.   பிரம்ம சமாஜத்தின் கிளை அமைப்பு - பிரார்த்தனை சமாஜம்.

20.   1867 - பம்பாய் இல் பிரார்த்தனை சமாஜத்தை தொங்கியவர் - ஆத்மராம் பாண்டுரங்.

21.   பிரார்த்தனை சமாஜத்தில் இரண்டு மேன்மை மிக்க உறுப்பினர்கள் - R.C.பண்டர்கர், M.G.ரானடே.

22.   மகாதேவ் கோவிந்த் ரானடே (1842 - 1901) தொடங்கிய அமைப்புகள்:

          1.    விதவை மறுமணச் சங்கம் - 1861.

          2.    புனே பர்வஜனிக் சபா - 1870 .

          3.    தக்கான கல்வி கழகம் - 1884 .

23.   குலாம்கிரி  (அடிமைத்தனம்) என்ற நூலின் ஆசிரியர் - ஜோதிபா பூலே.

24.   1875 - ஆண்டு ஆரிய சமாஜத்தை நிறுவியவர் - சுவாமி தயானந்த சரசுவதி.

25.   சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய நூல்கள்-சத்யார்த்த பிரகாஷ்.

26.   வேதங்களுக்கு திரும்புவோம் என்பது யாருடைய முழக்கம் - சுவாமி தயானந்த சரஸ்வதி (1824 - 1883).

27.   இஸ்லாமுக்கும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்ற தொடங்கிய இயக்கம் - சுத்தி இயக்கம்.

28.   சுத்தி இயக்கத்தை தொடங்கியவர் -சுவாமி தயானந்த சரஸ்வதி.

29.   ஆரிய சமாஜம் தூய்மைக் கோட்பாடு குறித்தக் கருத்து முரண்பாட்டால் இரண்டாக பிரிந்த ஆண்டு -1893.

30.   தயானந்த சரஸ்வதிக்கு பின்னர் ஆரிய சமாஜத்தின் பொறுப்பை ஏற்றவர்- ஸ்ரத்தானந்தா.

31.   ராமகிருஷ்ண பரமஹம்சர் காலம் -1836 - 1886.

32.   கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேஸ்வரம் என்னும் ஊரைச் சார்ந்த எளிய அர்சசகராக பணிபுரிந்தவர்-ராமகிருஷ்ண பரமஹம்சர்.

33.   கடவுள் காளியின் தீவிர பக்தர்-ராமகிருஷ்ண பரமஹம்சர்.

34.   ஜீவன் என்பதே சிவன் எனவும் கூறியவர்- ராமகிருஷ்ண பரமஹம்சர்.

35.   மனிதர்களுக்கு செய்யப்படும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவையாகும் என்றவர்-ராமகிருஷ்ண பரமஹம்சர்.

36.   ராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மைச் சீடர்- சுவாமி விவேகானந்தர்.

37.   சுவாமி விவேகானந்தர் இயற்பெயர் - நரேந்திரநாத் தத்தா.

38.   1893 - ல்  உலக சமய மாநாடு எங்கு நடைபெற்றது - சிகாகோ

39.   உலக சமய மாநாட்டில் இந்து சமயம், பக்தி மார்க்கத் தத்துவம் குறித்து சொற்பொழிவு ஆற்றியவர் - சுவாமி விவேகானந்தர்.

40.   1875 - பிரம்மஞான இயக்கத்தை அமெரிக்காவில் தோற்றுவித்தவர்கள் - H.P.பிளாவட்ஸ்கி, கர்னல் H.S.ஆல்கட் .

41.   1886 - ஆண்டு இந்தியாவில் பிரம்மஞான இயக்கம் சென்னை அடையாறில் தோற்றுவித்தவர் அன்னிபெசன்ட்.

42.   இந்தியாவில் பௌத்த சமயம் புத்துயிர் பெறுவதில் முக்கிய பங்கு வகித்த அமைப்பு- பிரம்ம ஞான சபை.

43.   அன்னிபெசன்ட் பிரம்மஞான கருத்துக்களை பரப்ப தொடங்கியசெய்திதாள் - நியு இந்தியா, காமன்வீல்.

44.   ஜோதிபா பூலே 1827 - மகாராஷ்டிராவில் பிறந்தார்.

45.   1852 - ஆண்டு - ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் துவங்கியவர் - ஜோதிபா பூலே .

46.   சத்யசோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம்) எனும் அமைப்பை தொடங்கியவர் - ஜோதிபா பூலே.

47.   ஜோதிபா பூலேயின் மனைவி - சாவித்திரி பாய்.

48.   பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும், விதவைகளுக்கு காப்பகங்களை உருவாக்கியவர் - ஜோதிபா பூலே .

49.   ஜோதிபா பூலே தீவிர கருத்துக்களை சுருக்கி கூறும் நூல் - குலாம்கிரி (அடிமைத்தனம்).

50.   ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பாட்டிற்காக தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பை தொடங்கியவர் - நாராயண குரு.

51.   அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலை கட்டி அதை அனைவருக்கும் அர்பணித்தவர் - நாராயண குரு.

52.   நாராயண குருவால் ஊக்கம்பெற்றவர் - அய்யன்காளி.

53.   அய்யன்காளி 1863 - ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள வெங்கநூரில் பிறந்தார்.

54.   1907 - சாது ஜன பரிபாலன (ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம்) எனும் அமைப்பை நிறுவியவர் - அய்யன் காளி.

55.   1875 - ஆண்டு அலிகார் முகமதிய ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியை  அலிகாரில் நிறுவியவர் - சர் சையது அகமதுகான்.

56.   அலிகார் முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி பல்கலைகழகமாக தரம் உயர்த்த பட்ட ஆண்டு- 1920.

57.   தியோபந்த் இயக்கம் ஒரு - மீட்பியக்கம்.

58.   1851 - இல் என்பார் ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா (பார்சிகளின் சீர்திருத்தச் சங்கம்) எனும் அமைப்பை நிறுவியவர் - பர்துன்ஜி நெளரோஜி.

59.   நிரங்கரி (உருவமற்ற) இயக்கத்தை நிறுவியவர் - பாபா தயாள்தாஸ் .

60.   நாம்தாரி இயக்கத்தை நிறுவியவர் - பாபாராம் சிங் .

61.   சிங்சபா நிறுவப்பட்ட இடம் - அமிர்தசரஸ்.

62.   சிங்சபா நோக்கம் - சீக்கிய மதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பது.

63.   இராமலிங்க அடிகளார் காலம் -1823 - 1874.

64.   இராமலிங்க சுவாமிகள் ( ) இராமலிங்க அடிகளார் - வள்ளலார்.

65.   துயரப்படும் உயிரினங்களை கண்டு இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள் ஆவார்கள் மற்றும் அவர்களது ஞானம் மேகங்களால் மூடப்பட்டு இருக்கும் என கூறியவர்- வள்ளலார்.

66.   1856 - ஆண்டு சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவியவர் - வள்ளலார்.

67.   1867 - வடலூரில் சாதி எல்லைகளை தாண்டி அனைத்து மக்களுக்கும் இலவச உணவகத்தை நிறுவியவர் - வள்ளலார்.

68.   வள்ளலார் பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது, சைவர்களை புண்படுத்தியதால் அவரது பாடல்கள் "மருட்பா" எனக் கண்டனம் செய்தனர்.

69.   வைகுண்ட சுவாமிகள் எங்கு பிறந்தார் - கன்னியாகுமரிக்கு அருகில் சாமித்தோப்பு-சாஸ்தாகோவில்விளை கிராமம்.

70.   வைகுண்ட சுவாமி இயற்பெயர் - முடிசூடும் பெருமாள்.

71.   சமத்துவ சமாஜ் - அமைப்பை நிறுவியவர் - வைகுண்ட சுவாமிகள்.

72.   வைகுண்ட சுவாமிகள் சமயவழிபாட்டு முறை - அய்யாவழி.

73.   வைகுண்ட சுவாமிகள் அறிவுரை கருத்துகள் அனைத்தும் தொகுக்கப்பட்ட நூல் -அகிலத்திரட்டு.

74.   ஒடுக்கப்பட்டோரின் கோவில்நுழைவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதற்காக அத்வைதானந்தா சபா எனும் அமைப்பை உருவாக்கியவர் - பண்டிதர் அயோத்திதாசர்.

75.   1882 - ம் ஆண்டு திராவிட கழகம் எனும் அமைப்பை நிறுவியவர்கள் -அயோத்திதாசர், ஜான் திரவியம்.

76.   திராவிட பாண்டியன் எனும் இதழை தொடங்கியவர் - அயோத்திதாசர்.

77.   அயோத்திதாசர் 1891 - ஆண்டு திராவிட மகாஜனசபை என்ற அமைப்பை நிறுவி முதல் மாநாடு எங்கு நடைபெற்றது - நீலகிரி.

78.   1907 - ஒரு பைசா தமிழன் என்ற பெயரில் ஒரு வாராந்திர பத்திரிகை தொடங்கியவர் - அயோத்திதாசர் .

79.   1898 - சாக்கிய பெளத்த சங்கம் எனும் அமைப்பை சென்னையில் நிறுவியவர் - அயோத்திதாசர் .

80.   சத்யார்த்தபிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர் - தயானந்த சரஸ்வதி.

81.   விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் -M.G. ரானடே

82.   ராஸ்ட் கோப்தார் யாருடைய முழக்கம்-பார்சி இயக்கம்.

 

https://www.a2ztnpsc.in/