19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
1. 1828 - பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்- ராஜா ராம்மோகன் ராய் -(1772-1833)
2. ராஜாராம் மோகன்ராய் புலமை பெற்றிருந்த மொழிகள்- வங்காளம் (தாய்மொழி),சமஸ்கிருதம்,அரபி,பாரசீகம்,ஆங்கிலம்.
3. ராஜா ராம்மோகன் ராய் கல்கத்தாவில் கோவிலை நிறுவிய ஆண்டு -1828 ஆகஸ்டு 20 . திருவுருவச் சிலைகள் வைக்கப்படவில்லை.
4. 1829-இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் சதி எனும் உடன்கட்டை
ஏறும்
பழக்கத்தை
ஒழித்துகட்ட
இயற்றிய
சட்டத்தில்
முக்கிய பங்கு
வகித்தவர்
- ராஜாராம் மோகன்ராய்.
5. இந்துக்களின்
மறை நூல்கள்
அனைத்தும்
ஒரே கடவுள்
கோட்பாட்டை
அல்லது ஒரே
கடவுளை வணங்குவதை
உபதேசிப்பதாக
கூறியவர்
- ராஜாராம் மோகன்ராய்.
6. ராஜாராம் மோகன்ராய் மறைவுக்குப் பின்னர் அவர் விட்டுச் சென்ற பணிகளை
தொடர்ந்தவர்- மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்.
7. ரவீந்திரநாத்
தாகூரின்
தந்தை - மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்.
1817 - 1905.
8. மகரிஷி தேவேந்திரநாத்
தாகூர் நம்பிக்கை
பற்றிய
எத்தனை
கொள்கைகளை
முன்வைத்தார்
- 4.
9. கேசவ் சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் இனைந்த ஆண்டு-1857.
10. பிரம்ம சமாஜம் உறுப்பினர்கள் இடையே பிளவு ஏற்பட்ட ஆண்டு -1886.
11. ஆதிபிரம்ம சமாஜம் - தேவேந்திரநாத் தாகூர்.
12. இந்திய பிரம்ம சமாஜ் - கேசவ் சந்திர சென்.
13. குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர் இந்தியாவின்
பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி நிறுவிய அமைப்பு - சாதாரண சமாஜ்.
14. நவீன வங்காள உரைநடையின் முன்னோடி - ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (1820-1891).
15. 1856 - இல் யாருடைய முயற்சியால்
விதவை மறுமண சட்டம் இயற்றப்பட்டது - ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்.
16. 1860 - இயற்றப்பட்ட திருமண வயதுச்சட்டம்
- திருமண வயது -10.
17. 1891 - இயற்றப்பட்ட திருமண வயதுச்சட்டம்
- திருமண வயது -12.
18. 1925 - இயற்றப்பட்ட திருமண வயதுச்சட்டம்
- திருமண வயது -13.
19. பிரம்ம சமாஜத்தின் கிளை அமைப்பு - பிரார்த்தனை சமாஜம்.
20. 1867 - பம்பாய் இல் பிரார்த்தனை சமாஜத்தை தொங்கியவர் - ஆத்மராம் பாண்டுரங்.
21. பிரார்த்தனை சமாஜத்தில் இரண்டு மேன்மை மிக்க உறுப்பினர்கள் - R.C.பண்டர்கர், M.G.ரானடே.
22. மகாதேவ் கோவிந்த் ரானடே (1842 - 1901) தொடங்கிய அமைப்புகள்:
1. விதவை மறுமணச் சங்கம் - 1861.
2. புனே பர்வஜனிக் சபா - 1870 .
3. தக்கான கல்வி கழகம் - 1884 .
23. குலாம்கிரி
(அடிமைத்தனம்) என்ற நூலின் ஆசிரியர் - ஜோதிபா பூலே.
24. 1875 - ஆண்டு ஆரிய சமாஜத்தை நிறுவியவர் - சுவாமி தயானந்த சரசுவதி.
25. சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய நூல்கள்-சத்யார்த்த பிரகாஷ்.
26. வேதங்களுக்கு திரும்புவோம் என்பது யாருடைய முழக்கம் - சுவாமி தயானந்த சரஸ்வதி (1824 - 1883).
27. இஸ்லாமுக்கும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்ற தொடங்கிய இயக்கம் - சுத்தி இயக்கம்.
28. சுத்தி இயக்கத்தை தொடங்கியவர் -சுவாமி தயானந்த சரஸ்வதி.
29. ஆரிய சமாஜம் தூய்மைக் கோட்பாடு குறித்தக் கருத்து முரண்பாட்டால் இரண்டாக பிரிந்த ஆண்டு -1893.
30. தயானந்த சரஸ்வதிக்கு பின்னர் ஆரிய சமாஜத்தின் பொறுப்பை ஏற்றவர்- ஸ்ரத்தானந்தா.
31. ராமகிருஷ்ண பரமஹம்சர் காலம் -1836 - 1886.
32. கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேஸ்வரம் என்னும் ஊரைச் சார்ந்த எளிய அர்சசகராக பணிபுரிந்தவர்-ராமகிருஷ்ண பரமஹம்சர்.
33. கடவுள் காளியின் தீவிர பக்தர்-ராமகிருஷ்ண பரமஹம்சர்.
34. ஜீவன் என்பதே சிவன் எனவும் கூறியவர்- ராமகிருஷ்ண பரமஹம்சர்.
35. மனிதர்களுக்கு செய்யப்படும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவையாகும் என்றவர்-ராமகிருஷ்ண பரமஹம்சர்.
36. ராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மைச் சீடர்- சுவாமி விவேகானந்தர்.
37. சுவாமி விவேகானந்தர் இயற்பெயர் - நரேந்திரநாத் தத்தா.
38. 1893 - ல்
உலக சமய மாநாடு எங்கு நடைபெற்றது - சிகாகோ
39. உலக சமய மாநாட்டில் இந்து சமயம், பக்தி மார்க்கத் தத்துவம் குறித்து சொற்பொழிவு ஆற்றியவர் - சுவாமி விவேகானந்தர்.
40. 1875 - பிரம்மஞான இயக்கத்தை அமெரிக்காவில் தோற்றுவித்தவர்கள் - H.P.பிளாவட்ஸ்கி, கர்னல் H.S.ஆல்கட் .
41. 1886 - ஆண்டு இந்தியாவில் பிரம்மஞான இயக்கம் சென்னை அடையாறில் தோற்றுவித்தவர் அன்னிபெசன்ட்.
42. இந்தியாவில் பௌத்த சமயம் புத்துயிர் பெறுவதில் முக்கிய பங்கு வகித்த அமைப்பு- பிரம்ம ஞான சபை.
43. அன்னிபெசன்ட் பிரம்மஞான கருத்துக்களை பரப்ப தொடங்கியசெய்திதாள் - நியு இந்தியா, காமன்வீல்.
44. ஜோதிபா பூலே 1827 - மகாராஷ்டிராவில் பிறந்தார்.
45. 1852 - ஆண்டு - ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் துவங்கியவர் - ஜோதிபா பூலே .
46. சத்யசோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம்) எனும் அமைப்பை தொடங்கியவர் - ஜோதிபா பூலே.
47. ஜோதிபா பூலேயின் மனைவி - சாவித்திரி பாய்.
48. பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும், விதவைகளுக்கு காப்பகங்களை உருவாக்கியவர் - ஜோதிபா பூலே .
49. ஜோதிபா பூலே தீவிர கருத்துக்களை சுருக்கி கூறும் நூல் - குலாம்கிரி (அடிமைத்தனம்).
50. ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பாட்டிற்காக தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பை தொடங்கியவர் - நாராயண குரு.
51. அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலை கட்டி அதை அனைவருக்கும் அர்பணித்தவர் - நாராயண குரு.
52. நாராயண குருவால் ஊக்கம்பெற்றவர் - அய்யன்காளி.
53. அய்யன்காளி 1863 - ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள வெங்கநூரில் பிறந்தார்.
54. 1907 - சாது ஜன பரிபாலன (ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம்) எனும் அமைப்பை நிறுவியவர் - அய்யன் காளி.
55. 1875 - ஆண்டு அலிகார் முகமதிய ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியை அலிகாரில் நிறுவியவர் - சர் சையது அகமதுகான்.
56. அலிகார் முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி பல்கலைகழகமாக தரம் உயர்த்த பட்ட ஆண்டு- 1920.
57. தியோபந்த் இயக்கம் ஒரு - மீட்பியக்கம்.
58. 1851 - இல் என்பார் ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா (பார்சிகளின் சீர்திருத்தச் சங்கம்) எனும் அமைப்பை நிறுவியவர் - பர்துன்ஜி நெளரோஜி.
59. நிரங்கரி (உருவமற்ற) இயக்கத்தை நிறுவியவர் - பாபா தயாள்தாஸ் .
60. நாம்தாரி இயக்கத்தை நிறுவியவர் - பாபாராம் சிங் .
61. சிங்சபா நிறுவப்பட்ட இடம் - அமிர்தசரஸ்.
62. சிங்சபா நோக்கம் - சீக்கிய மதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பது.
63. இராமலிங்க அடிகளார் காலம் -1823 - 1874.
64. இராமலிங்க சுவாமிகள் (அ ) இராமலிங்க அடிகளார் - வள்ளலார்.
65. துயரப்படும் உயிரினங்களை கண்டு இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள் ஆவார்கள் மற்றும் அவர்களது ஞானம் மேகங்களால் மூடப்பட்டு இருக்கும் என கூறியவர்- வள்ளலார்.
66. 1856 - ஆண்டு சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவியவர் - வள்ளலார்.
67. 1867 - வடலூரில் சாதி எல்லைகளை தாண்டி அனைத்து மக்களுக்கும் இலவச உணவகத்தை நிறுவியவர் - வள்ளலார்.
68. வள்ளலார் பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது, சைவர்களை புண்படுத்தியதால் அவரது பாடல்கள் "மருட்பா" எனக் கண்டனம் செய்தனர்.
69. வைகுண்ட சுவாமிகள் எங்கு பிறந்தார் - கன்னியாகுமரிக்கு அருகில் சாமித்தோப்பு-சாஸ்தாகோவில்விளை கிராமம்.
70. வைகுண்ட சுவாமி இயற்பெயர் - முடிசூடும் பெருமாள்.
71. சமத்துவ சமாஜ் - அமைப்பை நிறுவியவர் - வைகுண்ட சுவாமிகள்.
72. வைகுண்ட சுவாமிகள் சமயவழிபாட்டு முறை - அய்யாவழி.
73. வைகுண்ட சுவாமிகள் அறிவுரை கருத்துகள் அனைத்தும் தொகுக்கப்பட்ட நூல் -அகிலத்திரட்டு.
74. ஒடுக்கப்பட்டோரின் கோவில்நுழைவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதற்காக அத்வைதானந்தா சபா எனும் அமைப்பை உருவாக்கியவர் - பண்டிதர் அயோத்திதாசர்.
75. 1882 - ம் ஆண்டு திராவிட கழகம் எனும் அமைப்பை நிறுவியவர்கள் -அயோத்திதாசர், ஜான் திரவியம்.
76. திராவிட பாண்டியன் எனும் இதழை தொடங்கியவர் - அயோத்திதாசர்.
77. அயோத்திதாசர் 1891 - ஆண்டு திராவிட மகாஜனசபை என்ற அமைப்பை நிறுவி முதல் மாநாடு எங்கு நடைபெற்றது - நீலகிரி.
78. 1907 - ஒரு பைசா தமிழன் என்ற பெயரில் ஒரு வாராந்திர பத்திரிகை தொடங்கியவர் - அயோத்திதாசர் .
79. 1898 - சாக்கிய பெளத்த சங்கம் எனும் அமைப்பை சென்னையில் நிறுவியவர் - அயோத்திதாசர் .
80. சத்யார்த்தபிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர்
- தயானந்த சரஸ்வதி.
81. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர்
-M.G. ரானடே
82. ராஸ்ட் கோப்தார் யாருடைய முழக்கம்-பார்சி இயக்கம்.
0 Comments
THANK FOR VISIT