9TH- STD – இயல் - 9
1. இதழ்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், நிறுவனங்கள் மூலம் தமிழியலை உலகச் செயல்பாடாக ஆக்கியவர் - தனிநாயகம்
2. "யாதும் ஊரே யாவருங்கேளிர்'' என்ற பாடல்வரி யாருடையது - கணியன் பூங்குன்றனார்
3. "நான் மனிதன், மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று'' என்று கூறிய இலத்தீன் மொழிப் புலவர் - தெறன்ஸ்
4. "முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை" எனக் கூறியவர்- கோர்டன் ஆல்போர்ட்
5. கோர்டன் ஆல்போர்டின் மூன்று இலக்கணங்கள் - ஈடுபாடுகளை வளர்த்தல்,அறிந்து கொள்ளும் ஆற்றல்,வாழ்க்கைத் தத்துவத்தைக் கடைபிடித்தல்
6. குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதைப் 'பூட்கையில்லோன் யாக்கை போல' என்று புறநானூற்று பாடலில் பாடியவர் - ஆலத்தார் கிழார்
7. Altruism என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்- பிறநலவியல்
8. சீனநாட்டில் நலவியலை கற்பித்தவர் - லாவோட்ஸ்
9. பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் எந்த நாட்டைச் சேர்ந்த தத்துவ ஞானிகள்- கிரேக்கம்
10. பண்டைக்காலத்தில் எந்த நூல் பிறரைக் கவனத்தில் கொள்ளவில்லை- தருமசாத்திர நூல்
11. "மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள், பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களைத் தாழ்த்தவோ உயர்த்தவோ முடியாது" என்று கூறியவர்கள் - ஸ்டாயிக்வாதிகள்
12. "திருக்குறளில் உள்ளது போன்ற உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியங்களில் காண்பது அரிது" என்று கூறியவர் - ஆல்பர்ட் சுவைட்சர்
13. நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்தவர் - தொல்காப்பியர்
14. படுதிரை வையம் பாத்திய பண்பே' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - தொல்காப்பியம்
15. இம்மைச் செய்தது மறுமைக்கும் ஆமெனும் ஆறவிலை வணிகன் ஆய் அலன்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - புறநானூறு
16. திருக்குறளில் பண்புடைமை எனும் அதிகாரத்திற்கு உரை கண்டவர் - பரி பெருமாள்
17. முதல் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு - கோலாம்பூர், 1966
18. இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு - சென்னை, 1968
19. மூன்றாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு - பாரீஸ்,1970
20. நான்காவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு - யாழ்ப்பாணம்,1974
21. ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு - மதுரை, 1981
22. ஆறாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ,ஆண்டு - கோலாம்பூர்,1987
23. ஏழாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் , ஆண்டு - மொரீசியஸ், 1989
24. எட்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு- தஞ்சாவூர், 1995
25. செம்மொழி மாநாடு நடைபெற்ற இடம் ,ஆண்டு - 2010, கோவை
26. 'இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத் ' என்று தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு
27. 'இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த' என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு
28. பூட்கைமகன் அல்லது குறிக்கோள் மாந்தனின் இயல்புகள் குறித்து கூறும் நூல் - திருக்குறள்
29. "Sapens” எனப்படும் இலட்சிய புருஷனைப் போற்றி வந்த நாடு - இத்தாலி
30. “தமிழ்ச்சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தைத் தருவதாகும்" என்று கோப்பெருஞ்சோழனிடம் கூறியவர் - பிசிராந்தையர்
31. "எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய்நாடு என்றும், நம்நாடு எல்லா மக்களுக்கும் தாய்நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்'' என்ற கூற்றினைக் கூறியவர் - செனக்கா
32. “நான் பகுத்தறியும் கூட்டுறவும் உடையவன், நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன் : நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்" என்று கூறியவர் - மார்க்ஸ் அரேலியஸ்
33. மக்கள் அனைவரும் மக்கட்தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் - திருக்குறள்
34. திருவள்ளுவரை 'உலகப்புலவர்' என்று போற்றியவர் - ஜி.யு.போப்
35. தனிநாயகம் அடிகள், பஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவை எங்கு ஆற்றினார் - இலங்கை
36. தமிழ் பண்பாடு என்ற இதழைத் தொடங்கியவர் - தனிநாயகம்
37. அகில உலக தமிழாய்வு மன்றம் மற்றும் உலக தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் - தனிநாயகம்
38. லாவோட்ஸ் பிறந்த ஆண்டு - பொ.ஆ.மு. 604
39. கன்பூசியஸ் அவர்களின் காலம் - பொ.ஆ.மு. 551 - 479
40. “உண்டாலம்ம இவ்வுலகம் " என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் – புறநானூறு
41. உரைநடையில் கவிதை எழுதுவதை தம் வசன கவிதைகளின் வழியாகத் தொடங்கியவர் - பாரதியார்
42. யாருடைய கவிதைகளில் மனிதம் பரவலாக வலியுறுத்தப்படுகிறது- கல்யாண்ஜி
43. "சைக்கிளில் வந்த தக்காளிக் கூடை சரிந்து" என்ற கவிதையை இயற்றியவர் - கல்யாண்ஜி
44. உருண்டது","போனது" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - ஒன்றன்பால் வினைமுற்று
45. “சரிந்து' என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - வினையெச்சம்
46. "அனைவரும்” என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - முற்றும்மை
47. கல்யாண்ஜியின் இயற்பெயர் - கல்யாண சுந்தரம்
48. வண்ணதாசன் என்ற பெயரில் கதை எழுதுபவர் யார்- கல்யாண்ஜி
49. கல்யாண்ஜி எழுதிய கவிதைகள் - புலரி, மணல் உள்ள ஆறு,முன்பின், அன்னியமற்ற நதி,ஆதி
50. கல்யாண்ஜி எழுதிய கட்டுரை தொகுப்பின் பெயர் - அகமும் புறமும்
51. கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற சிறுகதையை எழுதியவர் - கல்யாண்ஜி
52. ஒளியிலே தெரிவது என்ற சிறுகதையை எழுதியவர் - கல்யாண்ஜி
53. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் என்ற சிறுகதையை எழுதியவர் - கல்யாண்ஜி
54. உயரப்பறத்தல் என்ற சிறுகதையை எழுதியவர் - கல்யாண்ஜி
55. கல்யாண்ஜியின் கடிதங்கள் எந்த பெயரில் தொகுக்கப்பட்டது - சில இறகுகள் சில பறவைகள்
56. 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு கல்யாண்ஜி எந்த ஆண்டு சாகித்திய அகாடமி பரிசு பெற்றார் - 2016
57. "இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்'' என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் –அமுதோன்
58. “பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடி" என்ற பாடலின் ஆசிரியர் - நா.முத்துக்குமார்
59. "வெட்டுக்கிளியின் சப்தத்தில் மலையின் மௌனம் ஒருகணம் அசைந்து திரும்புகிறது” என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் - பாஷோ
60. ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக கல்யாண்ஜி 2016 ல் - சாகித்திய அகாடமி பரிசு பெற்றார்
61. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் என்ற சிறுகதையை எழுதியவர் – கல்யாண்ஜி
62. எட்டுத்தொகை நூலில் நல்ல என்னும் அடைமொழி பெற்ற நூல் - குறுந்தொகை
63. “நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம் எனத் தொடங்கும் குறுந்தொகை பாடகை இயற்றியவர் - பாலை பாடிய பெருங்கடுங்கோ
64. பிடி என்பதன் பொருள் - பெண் யானை
65. வேழம் என்பதன் பொருள் - ஆண் யானை
66. "யாமரம்" என்பது எந்த நிலத்தில் வளரும் ஒரு வகை மரம் – பாலை
67. "களை இய" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக
- சொல்லிசை அளபெடை
68. “பொளிக்கும்" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக
- செய்யும் என்னும் வினைமுற்று
69. “அன்பின”என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - பலவின்பால் அஃறிணை வினைமுற்று
70. “நல்கலும் நல்குவா” என்பதன் இலக்கணக்குறிப்பு தருக
- எச்ச உம்மை
71. “பெருங்கை" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக
- பண்புத்தொகை
72. “மென்சினை” என்பதன் இலக்கணக்குறிப்பு தருக
- பண்புத்தொகை
73. “பிடிபசி" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக
- ஆறாம் வேற்றுமைத்தொகை
74. குறுந்தொகை கடவுள் வாழ்த்துடன் எத்தனை பாடல்களை உடையது - 401
75. குறுந்தொகையின் அடிவரையறையைக் கூறுக - 4 அடி சிற்றெல்லையும் 8 அடி பேரெல்லையும்
76. குறுந்தொகையை பதிப்பித்தவர் - சௌரிப்பெருமாள் அரங்கனார்
77. சௌரிப்பெருமாள் அரங்கனார் குறுந்தொகையை பதிப்பித்த ஆண்டு - 1915
78. பாலைபாடிய பெருங்கடுங்கோ எந்த மரபைச் சார்ந்தவர் – சேர
79. தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற நூலின் ஆசிரியர் - சு.சமுத்திரம்
80. சு.சமுத்திரம் எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர் - திருநெல்வேலி
81. சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு பிறந்தார் - திப்பணம்பட்டி
82. “என் கதைகளின் கதை'' என்ற கதையை எழுதியவர் - சு.சமுத்திரம்
83. "வாடாமல்லி" என்ற சிறுகதையை எழுதியவர்யார் - சுரதா
84. “பாலைப்புறா'' என்ற சிறுகதையை எழுதியவர்யார் - சு.சமுத்திரம்
85. "மண்கமை' என்ற சிறுகதையை எழுதியவர்
- சு.சமுத்திரம்
86. "தலைப்பாகை'' என்ற சிறுகதையை எழுதியவர்
- சு.சமுத்திரம்
87. "காகித உறவு" என்ற சிறுகதையை எழுதியவர்
- சு.சமுத்திரம்
88. சமுத்திரம் அவர்களின் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் - வேரில் பழுத்த பலா
89. சமுத்திரம் அவர்களின் தமிழக அரசு பரிசு பெற்ற நூல் - குற்றம் பார்க்கில்
90. செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது - அணி
91. அணி என்பதன் பொருள் - அழகு
92. “இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று" என்ற குறளில் பயின்று வரும் அணி - உவமை அணி
93. உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது எவ்வகை அணி - உருவக அணி
94. ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடத்தும் வருதல் எவ்வகை அணி - பின்வரு நிலையணி
95. பின்வரு நிலையணி எத்தனை வகைப்படும் - 3
96. வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருளை உணர்த்துவது எவ்வகை அணி - சொல் பின்வரு நிலையணி
97. துப்பு என்பதன் பொருள் - மழை
98. செய்யுளில் முன்வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களிலும் வருவது எவ்வகை அணி - பொருள் பின்வரு நிலையணி
99. "அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன, விரிந்தன, கொண்டன" ஆகிய சொற்கள் - மலர்ந்தனர் பொருளைத் தரும்.
100. முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர் பல இடங்களில் வருவது எவ்வகை அணி - சொற்பொருள் பின்வரு நிலையணி
101. "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு'' என்ற குறளில் பயின்று வரும் அணி - சொற்பொருள் பின்வரு நிலையணி
102. புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வது எவ்வகை அணி - வஞ்சப்புகழ்ச்சி அணி
103. “தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்'' என்ற குறளில் பயின்று வரும் அணி - வஞ்சப்புகழ்ச்சி அணி
104. மாரி என்பதன் பொருள் - மழை
105. “இமயத்துக் கோடு உயர்ந்தன்ன'' என்ற பாடலில் கோடு என்ற சொல்லின் பொருள்
- மலையுச்சி
106. தமிழ்ப்புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை - ஒன்றே உலகம்
107. வண்ணதாசனுக்கு சாகித்திய அகாடமி பரிசு பெற்றுத் தந்த நூல் - ஒரு சிறு இசை
108. "கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி - பொருள் பின்வரு நிலையணி
109. “ஐந்தாம் வேதம்" என அழைக்கப்படுவது - மகாபாரதம்
110. பாஞ்சாலி சபதத்தினை எழுதியவர் - சுப்பிரமணி பாரதியார்
111. பாஞ்சாலி சபதம் என்ற நூல் யார் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது - பாஷாபிமானிகளும்,தேசாபிமானிகளும்
112. 'ஞான பாநு' என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியர் - S. சுப்பிரமணிய சிவா
113. எந்த நூற்றாண்டில், கம்பரின் இராமாயணம் இலக்கியம் எனத் தகுதி பெற்றதோடு ஆய்வுக்குரிய பெருநூலாகவும் கருதப்பட்டது - 20 ஆம் நூற்றாண்டு
114. வால்மீகியிலிருந்து கம்பர் வேறுபடும் இடங்களை விரிவாகத் தொகுத்து உரைத்தவர்- அ. பாண்டுரங்கன்
115. வசைபாடுவதில் வல்லவர் - காளமேகம்
116. "எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்'' எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் - வள்ளலார்
117. "சிற்பியின் மகள்'' என்ற நூலின் ஆசிரியர் - பூ வண்ணன்
118. “அப்பா சிறுவனாக இருந்தபோது'' என்ற நூலின் ஆசிரியர் - அலெக்சாண்டர் ரஸ்கின்
119. "அப்பா சிறுவனாக இருந்தபோது " என்ற நூலை தமிழில் எழுதியவர் - முகமது செரீபு
120. "இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி" என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி - உருவக அணி
121. “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை” என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - சொல் பின்வருநிலையணி
122. “அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா நெகிழ்ந்தன நேர்முகை முல்லை மகிழ்ந்திகழ்" என்ற பாடலில் பயின்று வந்துள்ள
அணி - பொருள் பின்வருநிலையணி
123. பொருத்துக.
1. நசை - விருப்பம்
2. நல்கல் - வழங்குதல்
3. பொளிக்கும் - உரிக்கும்
4. ஆறு - வழி
124. பொருத்துக.
1. வெண்பாவிற்கு - புகழேந்தி
2. விருத்தம் - கம்பன்
3. அந்தாதி - ஒட்டக்கூத்தன்
4. கலம்பகம் - இரட்டையர்
125. பொருத்துக
1. ஆளுமை - Personality
2. பண்பாட்டுக் கழகம் - Cultural Academy
3. கட்டில்லாக் கவிதை - Free verse
4. மனிதம் – Humane
5. உவமை அணி - Simile
6. உருவக அணி - Metaphor
0 Comments
THANK FOR VISIT