கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் 

சுடலை மாட சாமி ஏழை பொண்ணு

கூக்குரல் கேட்டு காத்திட வேணும் சுடலை மாட சாமி

 

திக்கு திசை ஏது அன்பு தெய்வம் உதவாது

தன்னந்தனியாக நிற்கும் கன்னி இளமாது

கோட்டைய விட்டு வேட்டைக்கு

போகும் சுடலை மாட சாமி ஏழை பொண்ணு

கூக்குரல் கேட்டு காத்திட வேணும் சுடலை மாட சாமி

 

இல்லாத ஏழைகள் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஏன் என்று

கேக்க ஓர் நாதி இல்ல

செல்வாக்கு மேவிய ஊரார்க்கு மட்டும் நீ நல்வாக்கு

சொல்வது நீதி இல்லை

 

தெய்வத்தின் பார்வையில் ஜாதி

இல்லை தெய்வத்தை போல நீ இருக்க

உன்னைத்தான் நம்பி நான் இருக்க நல்வாக்கு

எங்கே கூறி விடு நம்பிக்கை வைத்தேன் வாழ்வு கொடு

 

எப்போது தீரும் இப்போது காணும் என் வேதனை

அம்மாடி இன்னும் தாளாது இங்கு உன் சோதனை

கோட்டைய விட்டு வேட்டைக்கு

போகும் சுடலை மாட சாமி

ஏழை பொண்ணு கூக்குரல் கேட்டு காத்திட

வேணும் சுடலை மாட சாமி

 

 

பொன் மாலை வேளையில் கை சேர மெய் சேர ஒன்றான

காட்சியும் நாடகமா

வெவ்வேறு மூலையில் நீ வாழ நான் வாழ கை பிள்ளைதான்

ஒரு ஞாபகமா கை விட்ட காதலின் சாட்சியமா

 

இன்னொரு தோளில் மாலை இட

என் உயிர் இங்கே தாங்கிடுமா

உன்னுடன் வாழ்ந்த காலமெல்லாம்

சொப்பனம் போலே ஆகிடுமா

 

கண்டவை யாவும் கற்பனை கோலம் என்றாகுமா

உள்ளங்கள் மீண்டும் வெள்ளங்கள் போல ஒன்றாகுமா

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி

ஏழை பொண்ணு கூக்குரல் கேட்டு காத்திட

வேணும் சுடலை மாட சாமி

 

திக்கு திசை ஏது அன்பு தெய்வம் உதவாது

தன்னந்தனியாக நிற்கும் கன்னி இளமாது

கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி

ஏழை பொண்ணு கூக்குரல் கேட்டு காத்திட வேணும் சுடலை மாட சாமி